ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி அணியும் – ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பெர்ஸ்டோவ் களமிறங்கினார்கள்.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய பின்னர், அதிரடியாக விளையாடினர். கேப்டன் டேவிட் வார்னர் 45 ரன்கள் அடித்து வெளியேற, அதன்பின் களமிறங்கிய மனிஷ் பாண்டே, 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்க, சிறப்பாக விளையாடிய பெர்ஸ்டோவ் 53 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், கேன் வில்லியம்சன் 41 ரன்கள் குவித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் அடித்தது.
163 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் பிருத்வி ஷா 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். பிருத்வி ஷா போல வந்த வேகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
நிதானமாக விளையாடி வந்த தவான் 34 ரன்னில் வெளியேறினர். இதைத்தொடர்ந்து, ரிஷாப் பந்த் 28
ஹெட்மியர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.
இதனால், ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…