chris gayle and virat [Image source : file image ]
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி குஜராத் அணியை வெற்றிபெற வைத்தார். இந்த போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலியும் அதிரடியாக விளையாடி சதம் விளாசி பல சாதனைகளை படைத்தார்.
நேற்று போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு 6 சதங்கள் எடுத்து கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது 7 சதங்கள் அடித்து விராட் கோலி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிறிஸ் கெய்ல் “என்னுடைய சாதனையை கோலி கடந்துவிட்டார். நான் ஓய்வில் இருந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறேன். அடுத்த வருடம் விராட் சாதனையை முறியடிப்பேன்” என நகைச்சுவையாக பேசியுள்ளார்.
மேலும், ஐபிஎல்லில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த முதல் பெங்களூர் வீரரும் விராட் கோலி தான். மேலும், கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…