விமர்சனங்களை பற்றி எனக்கு கவலை இல்லை ..நான் இப்படி தான் இருப்பேன்! – ரியான் பராக்

Published by
அகில் R

ரியான் பராக் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரராக விளையாடி வரும் ரியான் பராக் சமீபத்தில் பிடிஐக்கு (PTI) அளித்த பேட்டியை, ஈஎஸ்பிஎன் இன்ஃபோ (ESPN Info) வெளியிட்டுள்ளனர்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் வீரர் ரியான் பராக் இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 149.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 573 ரன்களை எடுத்துள்ளார், அதில் 4 அரை சதங்களும் அடங்கும். மேலும், லீக் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் பிளே-ஆஃப் சுற்றில் பல சவால்களை எதிர்கொண்டார்.

இதனால் லீக் போட்டிகளில் செயலாற்றிய அளவிற்கு பிளே-ஆஃப் சுற்றில் அந்த அளவிற்கு செயல்பட தவறினார். அதிலும் குறிப்பாக குவாலிபயர்-2 ம் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது யூட்யூப் தேடல் ஹிஸ்டரியால் உண்டான சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் பிடிஐ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், “எனது பேட்டிங் குறித்து உண்மையில் எனக்கே திருப்தி ஏற்படவில்லை. இது ஒரு நல்ல ஐபிஎல் சீசனாக எனக்கு அமைந்தாலும், சில போட்டிகளை ராஜஸ்தான் அணிக்காக முடித்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினேன்.

இதன் மூலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் நான் விளையாட வேண்டும் என்ற பாடத்தை கற்று கொண்டேன். கிரிக்கெட் என்பதே குழுவாக இணைந்து விளையாடி வெல்வது தான், நானும், சஞ்சு சாம்சனும் மட்டுமே ரன்களை சேர்ப்பதால் அணியால் வெற்றிபெற முடியாது.

மேலும், நாங்கள் அடிக்கும் ரன்கள் எல்லாம் எங்கள் அணிக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் சில போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இருப்ப்பினும், இந்த தொடரில் நம்பர் 3ல் முடித்தது மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணியில் நான் விளையாட மாட்டேன் என்று பலரும் கூறி வந்தார்கள்.

ஆனால் இப்போது ரியான் பராக்கை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவேன் என்று எனக்கும் தெரியும். அதற்கு 6 மாதமோ அல்லது ஒரு ஆண்டோ ஆகலாம்” என்று கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

“இங்கிலாந்தை வீழ்த்த எங்க கேப்டன் கில் ரெடியா இருக்காரு” குல்தீப் யாதவ் பேச்சு!

லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின்…

31 minutes ago

திக் திக்கை ஏற்படுத்தும் காந்தாரா! விபத்தில் உயிர் பிழைத்த நடிகர் ரிஷப் ஷெட்டி!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.…

1 hour ago

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு!

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில்…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து – இன்று கூடுகிறது உயர்மட்டக்குழு!

அகமதாபாத் :  விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜூன் 12 அன்று,…

2 hours ago

ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டம்? டிரம்ப் தடுத்து நிறுத்தினாரா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச…

3 hours ago

இஸ்ரேல் – ஈரான் மோதல்…இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்?

டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி…

3 hours ago