இந்திய வீரர்களின் ஊதியத்தில் 20% அபராதம்.. ஐசிசி அறிவிப்பு..!

Published by
murugan

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பந்து வீச அதிகம் நேரம் எடுத்தக்கொண்டதாக கூறி இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20% அபராதமாக விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்திய அணி கேப்டன் கோலி இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்  எனவே முறையான விசாரணை தேவையில்லை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தெரிவித்துள்ளது. ஆன்-பீல்ட் நடுவர்கள் ராட் டக்கர் மற்றும் சாம் நோகாஜ்ஸ்கி, டிவி நடுவர் பால் ரீஃபெல் மற்றும் நான்காவது நடுவர் ஜெரார்ட் அபுட் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் ஆரோன் பிஞ்ச் (114) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (105) அடித்தனர், டேவிட் வார்னர் (69) மற்றும் மேக்ஸ்வெல் (41) ரன்கள் அடித்தனர். இதனால், ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 374/6 ரன்கள் எடுத்தனர். அதற்கு பிறகு இறங்கிய இந்தியா 50 ஓவரில் 308/8 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு இறங்கிய ஹார்திக் பாண்ட்யா (90), ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்தனர்.

மேலும், கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி களம் கண்டது. அதன் பிறகு இந்தியா மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணம் இதுவாகும்.

Published by
murugan
Tags: AUSvINDICC

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

10 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

11 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

12 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

13 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

14 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

15 hours ago