இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. இலங்கை அணி 9 லீக் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 7 போட்டிகளில் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து வெளியேறியது.
அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 302 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வியை சந்தித்தது.குறிப்பாக வனிந்து ஹசரங்கா உட்பட சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுவும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த தோல்விக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் கலைத்து புது நிர்வாகிகளை நியமித்தார்.
இந்த செயல் ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதாகும். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இலங்கை அரசு தலையீடு இருப்பதால் இலங்கை அணியை ஐசிசி தற்காலிமாக தடை செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை விரைவில் உறுதி செய்ய வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…