உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இலங்கையிடமிருந்து பறித்த ஐசிசி..!

Published by
murugan

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இலங்கை மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தது. இலங்கை அணி 9 போட்டிகளில் விளையாடிய போது 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த உலகக் கோப்பையில் இலங்கை தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இலங்கையை பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தன. நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே இலங்கை வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.

இலங்கை அணி  சஸ்பெண்ட்: 

பின்னர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைக்கப்பட்டது. இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இருந்ததால் இலங்கை அணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்வதாக ஐசிசி அறிவித்தது. மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீட இல்லை என்பதை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்ய வேண்டும் என ஐசிசி தெரிவித்தது.

இலங்கை உலகக்கோப்பை போட்டியை நடத்த மறுப்பு : 

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை இலங்கையிடம் இருந்து ஐசிசி பறித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில்  நிலவும் குழப்பநிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியை நடத்தும் பொறுப்பை தென்னாப்பிரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024 அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை பற்றி பேசுகையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 1988ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 சீசன்கள் வந்துள்ளன. இந்தியா 5 சாம்பியனாக உள்ளது. ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இது தவிர வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு முறை பட்டத்தை வென்றுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில், 16 அணிகள் 4-4 என்ற குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

Published by
murugan

Recent Posts

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

7 minutes ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

1 hour ago

வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…

2 hours ago

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…

2 hours ago

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

10 hours ago