ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேஜிக் பவுலர் இம்ரான் தாஹிர், அஸ்வினுடன் இணைந்து தமிழில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதில் ரெய்னா, ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விலக, காயம் காரணமாக தற்பொழுது பிராவோவும் விளக்கினார். இது, சென்னை அணிக்கு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அடுத்த விழாவும் இணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த அணியின் அற்புத பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், ஐபிஎல் 2020-ல் சென்னை அணி விளையாடிய 10 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை.
தாஹிரின் மேஜிக் பந்துவீச்சில் இரண்டு வருடம் சென்னை இறுதி போட்டிக்கு சென்றது. அதில் ஒரு வருடம் கோப்பையை தட்டி சென்றது. அந்த சமயங்களில் இம்ரான் தாஹிர்தான் மேட்ச் வின்னராக இருந்ததை நாம் அறிந்தோம். தற்பொழுது பிராவோ விலகிய நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் தாஹிர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் பாட்டில் கொண்டு செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாக, விளையாடும் வீரர்களின் வரிசையில் இருப்பேனோ இல்லையோ, எனது ஆதரவு எப்போதும் சென்னை அணிக்கு இருக்கும்” என விளக்கமளித்தார். இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூ-டியூப் சேனல்க்கு பேட்டியளித்த தாஹிர், தனது வாழ்க்கை குறித்த பல தகவல்களை பகிர்ந்தார்.
மேலும், அவரிடம் அஸ்வின் தமிழில் நடிகர் ரஜினியின் வசனங்கள் மற்றும் சில தமிழில் வார்த்தைகளை கூற, அவருக்கும் அதற்கு பதிலளித்தார். குறிப்பாக, “எடுடா வண்டிய, போடுடா விசில” எனும் வசனமும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் “பராசக்தி ஹீரோ டா” “நாங்க திரும்பி வருவோம்” என பேசியது, இணையத்தில் அதிகளவில் பரவிவருகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…