ஐபிஎல் 2024 : கோலியின் அதிரடியில் … கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு ..!!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், பாஃப் டு பிளெசீயும் களமிறங்கினர். எதிர்பாராத விதமாக பாஃப் டு பிளெசீ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஃபார்மில் இருந்த விராட் கோலி கொல்கத்தா அணி பந்து வீச்சை பவுண்டரிகள் பறக்க விட்டார்.

அவருடன் கேமரூன் கிரீனும் பொறுப்புடன் விளையாடனார், இதனால் பெங்களுரு அணி ஸ்கோர் உயர தொடங்கியது. களத்தில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆனாலும், மற்ற வீரர்களின் மெதுவான ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் கூடினாலும் உயராமலே இருந்தது.

பெங்களூரு அணியில் அதிரடி காட்டுவார் என களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனி ஒரு ஆளாக நின்று விராட் கோலி ஆட்டமிழக்காமல் ஆர்சிபி ஸ்கொரை உயர்த்தி கொண்டிருந்தார். இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும் விராட் கோலியுடன் அதிரடி காட்ட பெங்களூரு அணி நல்ல ஸ்கொரை பதிவு செய்தது.

இறுதியில், 20 ஓவருக்கு பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் விராட் கோலி 58 பந்துகளுக்கு 83* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணியில் ஹாஷித் ராணாவும், ரஸ்ஸல்லும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் மூலம் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது கொல்கத்தா அணி.

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago