விக்ரம் ரத்தோர்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியிலும், இதற்கு முன் வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியிலும் சரி இந்திய அணியின் பேட்டிங்கில் 3-வதாக ரிஷப் பண்ட் களமிறங்கி அசத்தி வருகிறார்.
அயர்லாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி 1 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறிய போது ரிஷப் பண்ட் களமிறங்கி 26 பந்துக்கு 36 ரன்கள் எடுத்து அசத்தினார். அதே போல தான் பயிற்சி போட்டியிலும் ஒரு அரை சதம் அடித்து கலக்கினார். இதற்கு முன் இந்திய அணியில் அவர் 4-வது அல்லது 5வது தான் களமிறங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அன்று அயர்லாந்து அணியுடனான போட்டி முடிவடைந்த பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான விக்ரம் ரத்தோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இதனை குறித்து அவர் பேசும் போது, “ரிஷப் பண்ட் தான் எங்கள் அணியின் தற்போதைய 3-வது பேட்டிங் வரிசை வீரர் அதில் மாற்றம் எதுவும் இல்லை. மேலும், அவரும் அந்த இடத்தில் நன்றாக பேட்டிங் செய்கிறார்.
அவர் 3-வதாக களமிறங்கும் போது பேட்டிங் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஒரு கூடுதல் பலனாக அமையும். அது மட்டுமின்றி ஒரு ஆல்-ரவுண்டருக்கும் அணிக்குள் இடம் கிடைக்கிறது. இதனால் தான் ரிஷப் பண்ட் 3-வது களமிறங்குகிறார்”, என்று அவர் பேசி இருந்தார்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…