நாளை நடைபெறவிருக்கும் இந்தியா-பாக். போட்டி! மழை பெய்ய வாய்ப்பு.?

Published by
கெளதம்

டி20I : இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, மழையால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறும் இப்போட்டிக்காக, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், டாஸ் அல்லது போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது. அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்தியாவில் இரவு 8:30மணிக்கு ) மழை பெய்ய 51 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக, தனியார் வானிலை நிறுவனமான (Accuweather) கணித்துள்ளது.

ஒரு வேளை போட்டி மழையால் நடத்த முடியாமல் போனால், அந்த போட்டியை ஐசிசி கைவிட்டு விடும். இதனால் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகளை வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மறுமுனையில் கிரிக்கெட் ரசிகர்கள் உலகின் மிகபெரிய எதிர்ப்பார்ப்பு அடங்கிய போட்டியானது நடைபெற வேண்டும் என மிகுந்த எதிர்ப்பரப்பில் இருந்து வருகின்றனர்.

அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான அணி நாளை பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்குகிறது. அதே போல, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியம் தனது முந்தைய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் அமெரிக்காவுக்கு எதிராக ஏமாற்றமளிக்கும் தோல்வியுடன் இந்திய அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
கெளதம்

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

4 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

4 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

5 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

5 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

6 hours ago