சதத்தை தவற விட்ட பண்ட்; முதல் நாள் ஆட்ட முடிவில் 357 ரன்கள் எடுத்த இந்தியா..!

Published by
murugan

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.   டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா , மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் 6 பவுண்டரி உட்பட 29  ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஹனுமா விஹாரி களமிறங்க நிதானமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிங்கிய கோலி, ஹனுமா விஹாரி இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இப்போட்டியில் பொறுமையாக விளையாடிய கோலி அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லசித் எம்புல்தெனிய வீசிய பந்தில் 45 ரன் எடுத்து போல்ட் ஆனார்.

சிறப்பாக விளையாடி வந்த ஹனுமா விஹாரி அடுத்த 2 ஓவரில் அரைசதம் விளாசி  58 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 27 ரன் எடுத்து நடையை கட்டினார். மத்தியில் இறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். இதனால், ரிஷப் பண்ட்  சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி , 4 சிக்ஸர் என 96 ரன் எடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து களம் கண்ட ரவீந்திர ஜடேஜா , அஸ்வின்  சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 357 ரன் எடுத்துள்ளனர். களத்தில் ரவீந்திர ஜடேஜா 45*, அஸ்வின்  10* ரன் எடுத்து விளையாடி வருகின்றனர்.

 

Published by
murugan
Tags: #INDvSL#TEST

Recent Posts

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

8 minutes ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

31 minutes ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

1 hour ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

2 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

3 hours ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

3 hours ago