விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இதுவரை தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் 2 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, தற்பொழுது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இதன்காரணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் விராட் கோலி, கடும் நெருக்கடியில் உள்ளார். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி, தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ரஹானே தலைமையிலான இந்திய அணி, அதிரடியாக ஆடி, டெஸ்ட் தொடரை ட்ரா செய்தது.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் கோலி தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் அடிலெய்டு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதன்பின், நான்காம் முறையாக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதனால் அடுத்த 13 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் எனவும், இதனை கருத்தில் கொண்டு இந்திய அணி, 2 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…