இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, தற்பொழுது 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி, அடுத்த டுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் போட்டியை காண 15,000 ரசிகர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியது.
இதனால் பெரும் வரிசையில் நின்று, ரசிகர்கள் டிக்கெட்டினை வாங்கி சென்றனர். மேலும், நீண்ட நாட்களுக்கு பின் இந்தியாவில் ரசிகர்களுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த டெஸ்டிலும் தோல்வியடைந்தால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக ஐந்தாம் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
மேலும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்குகிறது. இதனால் இரண்டாம் டெஸ்ட் விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…