இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியில் அக்சர் படேல் 6, அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள். பின்னர் இறங்கிய இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ரூட் 5 , ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 30.4 ஓவரில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால், இந்திய அணிக்கு 49 ரன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் அக்சர் படேல் 5 , அஸ்வின் 4, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் விக்கெட்டை இழக்காமல் 7.4 ஓவரில் 49 ரன்கள் எடுத்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…