ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ.
19 வயதிற்குட்பட்டோருக்கான #WorldCup2022 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. யாஷ் துல் தலைமையிலான இளம்படையில் தமிழக வீரர் மனோவ் பாரக் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்திய அணியின் முதல் போட்டி ஜன.15-ம் தேதி தென்னாப் பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. 2வது போட்டி ஜன.19-ஆம் தேதியும், 3வது மற்றும் கடைசி போட்டி ஜன.22-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. முதல் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி இரண்டு போட்டிகள் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி U-19 உலகக்கோப்பை – இந்திய அணி வீரர்கள்:
யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, எஸ்கே ரஷீத் (துணை கேப்டன்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனிஷ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கவுஷல் தம்பே, ஆர்எஸ் ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓட்ஸ்வால், ரவிக்குமார், கர்வ் சங்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…