இந்திய அணி தற்போது 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனையடுத்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனால், தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களம் கண்ட புஜாரா 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால் கேப்டன் கோலி முதல் 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், ரசிகர்கள் எதிர்ப்பட்டது போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 7 ரன் எடுத்து விராட் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். இந்திய அணி இழந்த 3 விக்கெட்டையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பறித்தார். அதிலும், குறிப்பாக கே.எல் ராகுல், புஜாரா, கோலி 3 பேரும் ஜோஸ் பட்லரிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தற்போது 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோஹித் 14, ரகானே 16 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…