மேற்கிந்திய தீவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி

Published by
Dinasuvadu Web

மேற்கிந்திய தீவை மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்,அதிரடியாக அரை சதம் விளாசிய இஷான் கிஷன் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.

மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மேற்கிந்திய தீவுகள் :

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவின் தொடக்க ஆட்டக்காரர்களான பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கியன்.கைல் மேயர்ஸ்  வந்த வேகத்தில் 2 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பிராண்டன் கிங் (17) ,அலிக் அதானாஸ்(22),ஷாய் ஹோப்(36) என மூவர் மட்டும் அதிகபட்சமாக இரட்டை இலக்க ரன்னை கடந்தனர்.அதன் பின்னர் வந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓவர்களில்  முடிவில் 114 அனைத்து விக்கெட்டைகளையும் இழந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையம் ரவீந்திர ஜடேஜா 3  விக்கெட்களை வீழ்த்த ஹர்திக் பாண்டியா,முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதில் தனது முதல் போட்டியில் களம்கண்ட முகேஷ் குமார் 5 ஓவர்கள் வீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் இதில் ஒரு மெய்டன் அடங்கும்.

இந்திய அணி :

இதனைத்தொடர்ந்து இந்திய அணி 115 என்ற சுலபமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும்  சுப்மான் கில் களமிறங்கினர்.

சுப்மான் கில் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க  இஷான் கிஷன் 52 ரன்கள் எடுத்து தனது வலுவான பேட்டிங்கை மீண்டும் நிருபித்தார் .அவரைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கு ரன்அவுட்  ஆகி ஏமாற்றத்தை தந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்கள் இழக்க அட்டமா சற்று மெதுவாக நகர்ந்தது இவர்களை தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா 16 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருந்தார். ஷர்துல் தாக்கூர் 1 ரன் எடுத்து  வந்தவேகத்தில் வெளியேறினர் .கேப்டன் ரோஹித் ஷர்மா  8 நபராக களத்தில் இறங்கி அவர் பங்கிற்கு 12 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதியில் இந்திய அணி  22.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி: ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷிம்ரோன் ஹெட்மியர், அலிக் அதானாஸ், ரோவ்மேன் பவல், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஓஷேன் தாமஸ், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், டொமினிக் டிரேக்ஸ் யானிக் கரியா

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாக்கூர் , அக்சர் படேல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்

Published by
Dinasuvadu Web

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

10 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

10 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

11 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

12 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

12 hours ago