INDvAUS [FILE IMAGE]
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அருமையாக விளையாடி வருகிறது. முதலில் வந்த ருத்ராஜ் மற்றும் சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. ஒரு பக்கம் கில் அதிரடியாக விளையாடினார். மற்றோரு பக்கம் நின்று கொண்டு இருந்த ருத்ராஜ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி இருவருமே சதம் அடித்தனர். சுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்தனர். பிறகு ஷ்ரேயாஸ் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சுப்மன் கில்லும் வெளியேறினார்.
பின், களத்திற்கு வந்த கேப்டன் கேஎல் ராகுல் , இஷான் கிஷனும் இணைந்து நன்றாக விளையாடினார்கள். பிறகு கேஎல் ராகுல் 52 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷனும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பிறகு சூர்யகுமார் யாதவ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 72* அவருடன் ரவீந்திர ஜடேஜா 13* ரன்கள் எடுத்தனர்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரையில், ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் கிரீன் 10 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்களையும், ஜோஷ் ஹேசில்வுட், சீன் அபோட், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…