IND v SA , T20 Worldcup Final 2024 [file image]
டி20உலகக்கோப்பை : தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் சந்திக்கும் இரு அணிகளான இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இதுவரை இந்த தொடரில் ஒரு தோல்விகளை கூட சந்திக்கவில்லை.
இதனாலே இந்த இறுதி போட்டிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. இரு அணிகளின் பொதுவான பலமே இரு அணிகளின் பந்து வீச்சு தான். அதே நேரம் தென்னாபிரிக்கா அணியை விட இந்திய அணி பேட்டிங்கில் சற்று வலுவாக இருந்து வருகின்றனர்.
இந்திய அணி இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தற்போது 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதில் முதல் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரான 2007 ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் தென்னாபிரிக்கா அணி ஐசிசி தொடரில் முதல் முறையாக ஒரு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த பல வருடங்கள் நடைபெறும் ஐசிசி தொடரில் தென்னாபிரிக்கா அணி அரை இறுதி போட்டி வரை வந்துவிட்டு வெளியேறிவிடுவார்கள்.
இந்திய அணி :
தென்னாபிரிக்கா அணி :
இந்திய அணியில் பலம் அவர்களது பேட்டிங் தான், தொடக்க வீரரான விராட் கோலி இதுவரை பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை, இருப்பினும் ரோஹித் சர்மா, பண்ட் , சூரியகுமார் யாதவ், பாண்டியா என வலுவான பேட்டிங் கொண்ட அணியாக இந்திய அணி இருந்து வருகிறது.
அதே போல தென்னாபிரிக்கா அணியும் வலுவான பேட்டிங் கொண்ட அணியாக தான் இருந்து வருகிறது. ஆனால், முனைப்புடன் எந்த வீரரும் இந்த தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு அணிகளில் பந்து வீச்சு வீரர்கள் சமமாகவே உள்ளனர். அதிலும் இந்திய அணியில் குலதீப் யாதவ் என்றால் அங்கு ஷாம்ஷி உள்ளார். அதே போல இந்தியா அணியில் பும்ரா என்றால் தென்னாபிரிக்கா அணியில் ரபாடா உள்ளார். ஆகையால் இந்த போட்டி இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இரு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அது இன்றைய நாளில் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையாக அமையும் என்பதில் சந்தீகமில்லை. இந்த போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸ் மைதானத்தில் வைத்து நடைபெறும்.
இந்த போட்டியை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…