#INDvENG: 4-வது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி..!

Published by
murugan

இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

4 வது டி-20 போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா 12, கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

அவரையடுத்து களமிறங்கிய கோலி 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற பின்னர், சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இதைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் 30 பாண்டியா, 11 ரன்கள் மட்டுமே அடித்தார். இறுதியாக இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்தனர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியில் முதலில்  ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இருவரும் இறங்கினர். ஆனால், ஆட்டம் தொடக்கத்திலே 9 ரன்னுடன் பட்லர் வெளியேற, இதைத்தொடர்ந்து இறங்கிய டேவிட் மாலன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின்னர் நிதானமாக விலையாடி வந்த ஜேசன் ராய் 40 ரன்கள் எடுத்தார்.

பிறகு களம்கண்ட பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டுகொண்டு வந்தனர். ஆனால் இவர்களின் கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பின்னர், ஜானி பேர்ஸ்டோவ் 25, பென் ஸ்டோக்ஸ்அரைசதம் அடிக்காமல் 46 ரன்னில் வெளியேறினர்.

இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகளில் இங்கிலாந்து, இந்தியா தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்று  2-2 என்ற கணக்கில் சமமாக உள்ளது. இந்திய அணியில் சர்துல் தாக்கூர் 3 , பாண்ட்யா, ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

Published by
murugan
Tags: #INDvENG

Recent Posts

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

16 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

58 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

1 hour ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

12 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago