இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தனர்.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 3-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினார். ஆனால், இரண்டாவது போட்டி போல இந்தப் போட்டியிலும் கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து 2-வது போட்டியில் அரைசதம் விளாசிய இஷான் கிஷன் இந்த போட்டியில் 4 ரன்களுடன் நடையை கட்டினார். பின்னர் இறங்கிய ரிஷாப் பந்த் 25, ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்தார். ஆனால் மத்தியில் இறங்கிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி நிதானமாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசி 77*ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தனர். 157 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறக்கவுள்ளது. கடந்த போட்டியிலும் கேப்டன் விராட்கோலி அரை சதம் விளாசி 73*ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…