சூப்பர் ஓவர்…சூப்பர் பாய்ஸ்..டை ஆனது போதும் வெற்றிநடை..குறித்து கோலி பகிர்வு

Published by
kavitha
  • இரண்டு போட்டியிலும் டை விறுவிறுப்பான ஆட்டம் மகிழ்ச்சி அளித்தது கோலி பேட்டி.
  • சுவரஸ்சியம் நிறைந்த போட்டியில் பெற்ற வெற்றி பெருமையை அளிக்கிறது என்று கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.அதனடி நேற்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளனர்.

Image

முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தது. 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய நியூஸிலாந்து அணி  20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்ததால்  போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.இதைத்தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 13ரன்கள் எடுத்தது.அடுத்து களமிரங்கிய இந்திய அணி  20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் குறித்து கோலி கூறுகையில் கடந்த இரண்டு ‘டை’ ஆட்டங்களில் இருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு உள்ளேன். எதிர் அணியினர் நன்றாக ஆடும்போது பொறுமை காத்து கடைசியில் மீண்டெழுகின்ற அந்த வாய்ப்பைத்தான் கூறுகிறேன்.இது போல விறுவிறுப்பான ஆட்டத்தினை ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது . இதற்கு முன் சூப்பர் ஓவரில் ஆடியதில்லை, ஆனால் த்ற்போது தொடர்ச்சியாக 2 சூப்பர் ஓவரில் வென்று உள்ளோம். இது  நம் அணியின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

விறுவிறுப்பான இந்த சூப்பர் ஓவரில் முதலில் சாம்சனையும் ராகுலையும் தான் அனுப்புவதாக முடிவாக இருந்தது ஆனால் ராகுல் என்னிடம் நீங்கள்  இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என் அனுபவம்,களத்தில் ஆடும் விதம் உதவும் என்றார், இதனை அடுத்தே நானும் ராகுலும் களத்தில் இறங்கினோம், ராகுலின் 2 அதிரடி அடி முக்கியமாக அமைந்தது, மறுபக்கம் சைனி மீண்டும் தனது வேகத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இத்தைய சுவரஸ்சியம் நிறைந்த வெற்றிகள் பெருமை அளிக்கின்றது என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

3 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago