தென்னாபிரிக்கா அணியும் , இந்திய அணியும் தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். நேற்று 2-வது டி20 போட்டி மொஹாலியில் உள்ள ஐ.எஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிறகு இறங்கிய இந்திய அணி 19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா அணியை வெற்றி பெற செய்தார்.
இப்போட்டியில் கோலி 52 பந்தில் 72 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. மேலும் சர்வேதேச டி20 போட்டியில் மொஹாலி மைதானத்தில் அதிகபட்சமாக அடித்த ரன் பட்டியலில் மீண்டும் கோலி இடம் பிடித்து உள்ளார்.
இதற்கு முன் கோலி 2016 -ம் நடைபெற்ற சர்வேதேச டி20 போட்டியில் 82 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.அதன் பின்னர் மீண்டும் 72 ரன்கள் அடித்து அந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.
கோலி-82* (2016)
குப்தில் – 80 (2016)
கோலி – 72 * (2019)
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…