#IPL BREAKING: கோலி, டு பிளெசிஸ் அதிரடி ஆட்டம்..! பெங்களூரு அணி அபார வெற்றி..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs RCB போட்டியில், பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தில் உள்ள  ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்களூருஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆட்டமிழக்க, கேப்டன் மார்க்ரேம் மற்றும் கிளாஸன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய கிளாஸன் 49 பந்துகளில் சதம் அடிக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 187 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி, டு பிளெசிஸ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் கடந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 62 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதமடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் டு பிளெசிஸ், நடராஜன் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் மற்றும் பிரேஸ்வெல் இணைந்து வெற்றி இலக்கை எட்டச்செய்தனர். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 100 ரன்களும், டு பிளெசிஸ் 71 ரன்களும் குவித்தனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago