#IPL BREAKING: குஜராத் பந்துவீச்சில் மிரண்டது மும்பை..! 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரில் இன்றைய MI vs GT போட்டியில், குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, குஜராத் அணியில் முதலில் விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய அபினவ் மனோகர் மற்றும் டேவிட் மில்லர் அணிக்கு ரன்களை குவித்தனர். முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து, 208 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் மும்பை அணியில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்க, 2 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, கேமரூன் கிரீன் களமிறங்கி பொறுப்பாக விளையாடிய நிலையில் 33 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் 23 ரன்களுக்கு அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறினார்.

இறுதியில் நேஹால் வதேரா மற்றும் பியூஷ் சாவ்லா களத்தில் இருக்க, வதேரா மட்டும் அதிரடியாக விளையாடி பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார். அவர், 21 பந்துகளில் 40 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதன்மூலம், குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 40 ரன்களும்,  கேமரூன் கிரீன் 33 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 23 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணியில் நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…

16 minutes ago

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

3 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

4 hours ago