#IPL BREAKING: நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக KKR-ரிடம் வீழ்ந்த RCB..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs KKR போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

16-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பெங்களுருவில் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில் ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜேசன் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். நிதிஷ் ராணா அரைசதம் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறினார். முடிவில், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி அரைசதமும் (54 ரன்கள்), அதன்பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டு பிளெசிஸ் (17 ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல் (5 ரன்கள்) பெரிதும் ரன்கள் குவிக்காமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பிறகு, மஹிபால் லோமரோர் (34 ரன்கள்) மற்றும் தினேஷ் கார்த்திக் (22 ரன்கள்) பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்து வந்த நிலையில், பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 179/8 ரன்கள் குவித்தனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ரஸல் மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago