#IPL BREAKING: நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக KKR-ரிடம் வீழ்ந்த RCB..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs KKR போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

16-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பெங்களுருவில் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில் ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜேசன் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். நிதிஷ் ராணா அரைசதம் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறினார். முடிவில், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி அரைசதமும் (54 ரன்கள்), அதன்பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டு பிளெசிஸ் (17 ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல் (5 ரன்கள்) பெரிதும் ரன்கள் குவிக்காமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பிறகு, மஹிபால் லோமரோர் (34 ரன்கள்) மற்றும் தினேஷ் கார்த்திக் (22 ரன்கள்) பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்து வந்த நிலையில், பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 179/8 ரன்கள் குவித்தனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ரஸல் மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

3 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

3 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

6 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

6 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

7 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

7 hours ago