ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம்.! பிசிசிஐ-க்கு கோரிக்கை.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான 13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறைந்தால் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்பைவிட இருமடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. கிரிக்கெட் போட்டியை விட மக்களின் நலனே முக்கியம் என்றுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தங்கள் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிறுவகத்தின் பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம்  செய்ய முடியாது என கூறியுள்ளார். 

மேலும் கூறுகையில், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும், உடல் நலனும் இப்போது முக்கியம் என்றும் உலகமே பெரும் இழப்பை சந்தித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

3 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago