IPL தொடரால் மக்களின் மனநிலையை மாற்ற முடியும் – சஞ்சு சாம்சன்

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்றமுடியும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், ஒரு பகுதியாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டி முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா தீவிரம் காரணமாக காலவரையின்றி ஒத்துவைக்கப்படுவதாக கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது. இதனால் மீண்டும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சஞ்சீவ் சாம்சன், ஊரடங்கு காரணமாக மைதானத்தில் பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது கவலையளிப்பதாகவும், இதனால் சகோதரின் மாடியில் வலையை கட்டி டென்னிஸ் பந்து மூலம் பேட்டிங் பயிற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்றமுடியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மைதானங்கள் காலியாக உள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் மீண்டும் நடைபெறும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, விளையாட்டு வீரர் என்ற முறையில் சொன்னால் முடிந்த வரை போட்டிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்பதே தனது விருப்பமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

8 minutes ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

28 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

44 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

1 hour ago

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

2 hours ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

2 hours ago