கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்றமுடியும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், ஒரு பகுதியாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டி முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா தீவிரம் காரணமாக காலவரையின்றி ஒத்துவைக்கப்படுவதாக கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது. இதனால் மீண்டும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சஞ்சீவ் சாம்சன், ஊரடங்கு காரணமாக மைதானத்தில் பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது கவலையளிப்பதாகவும், இதனால் சகோதரின் மாடியில் வலையை கட்டி டென்னிஸ் பந்து மூலம் பேட்டிங் பயிற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்றமுடியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மைதானங்கள் காலியாக உள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் மீண்டும் நடைபெறும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, விளையாட்டு வீரர் என்ற முறையில் சொன்னால் முடிந்த வரை போட்டிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்பதே தனது விருப்பமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…