ஐபிஎல் 2024 : ஒன்று கூடும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ..!! ஐபிஎல்லின் அடுத்த கட்ட திட்டம் என்ன ..?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : வருகிற ஏப்ரல்-16 ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சந்திப்பு.

ஐபிஎல் தொடரின் 31-வது போட்டியாக ஏப்ரல் 16-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. அன்று நடைபெறுகிற இந்த போட்டியின் போது ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஒன்றாக சந்தித்து பேச உள்ளதாக தற்போது ஐபிஎல் சி.இ.ஓ (CEO) ஆன ஹேமங் அமீன் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் .

இந்த சந்திப்பு ஐபிஎல்லில் நிலவி வரும் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்த சந்திப்பு வர விருக்கும் மெகா ஐபிஎல் ஏலத்தை பற்றியும் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது என்று ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது. மேலும், ஐபிஎல்லின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,

இந்த சந்திப்பிற்கு பத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதனால், 10 அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் CEO-க்கள் மற்றும் குழுவினர்களோடு கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கான முக்கிய காரணம் ஏலத்தின் போது அணிகள் தங்களது பிரபலமான வீரர்களை தக்க வைத்து கொள்வது, அதிக காசு கொடுத்து எடுக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளாமல் இருப்பது, மேலும் ஐபிஎல் தொடரை முன்னோக்கி கொண்டு போக அடுத்தகட்ட நடவடிக்கை போன்ற விஷயங்களையும் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Recent Posts

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

14 minutes ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

8 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

9 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago