ஐபிஎல் 2024 : ஒன்று கூடும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ..!! ஐபிஎல்லின் அடுத்த கட்ட திட்டம் என்ன ..?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : வருகிற ஏப்ரல்-16 ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சந்திப்பு.

ஐபிஎல் தொடரின் 31-வது போட்டியாக ஏப்ரல் 16-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. அன்று நடைபெறுகிற இந்த போட்டியின் போது ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஒன்றாக சந்தித்து பேச உள்ளதாக தற்போது ஐபிஎல் சி.இ.ஓ (CEO) ஆன ஹேமங் அமீன் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் .

இந்த சந்திப்பு ஐபிஎல்லில் நிலவி வரும் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்த சந்திப்பு வர விருக்கும் மெகா ஐபிஎல் ஏலத்தை பற்றியும் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது என்று ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது. மேலும், ஐபிஎல்லின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,

இந்த சந்திப்பிற்கு பத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதனால், 10 அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் CEO-க்கள் மற்றும் குழுவினர்களோடு கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கான முக்கிய காரணம் ஏலத்தின் போது அணிகள் தங்களது பிரபலமான வீரர்களை தக்க வைத்து கொள்வது, அதிக காசு கொடுத்து எடுக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளாமல் இருப்பது, மேலும் ஐபிஎல் தொடரை முன்னோக்கி கொண்டு போக அடுத்தகட்ட நடவடிக்கை போன்ற விஷயங்களையும் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

9 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

10 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago