இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் சாம் கரண் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷேன் வாட்சன் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த வாட்சன் 36 ரன் எடுத்து வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் அடித்து 58 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து, களம் கண்டார். ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு இருவரும் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கடைசிவரை களத்தில் ரவீந்திர ஜடேஜா 33*, அம்பதி ராயுடு 45* ரன்களுடன் நின்றனர். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி 180 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிருத்வி ஷா களமிறங்க பிருத்வி ஷா ரன் எடுக்காமல் வெளியேறினார்.
பின்னர், இறங்கிய ரஹானே 8 , ஸ்ரேயாஸ் 23 ரன்கள் எடுத்து பெவிலியன் சென்றனர். இதைத்தொடர்ந்து, தொடக்க வீரராக களம் கண்ட ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசி 101 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
அதில், 14 பவுண்டரி , 1 சிக்ஸர் அடக்கும். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…