#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா சென்னை? பெங்களூர் அணியுடன் இன்று மோதல்!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 22-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 18 போட்டிகளிலும், பெங்களூர் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத நிலையில், பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. இதனால் சென்னை அணிக்கு இது முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

அதேபோல பெங்களூர் அணி சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர் தோல்விகள் காரணமாக பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றைய போட்டியில் அதிரடியாக வெற்றிபெற்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் XI:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி, ஆடம் மில்னே ஆகியோர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஃபாப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

17 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

37 minutes ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

1 hour ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

2 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

3 hours ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

4 hours ago