#IPLNEWS: அடுத்தடுத்த அடி.. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா ஜடேஜா?

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை அணி வீரர் ஜடேஜா, நடப்பு சீசனில் இருந்து விலக உள்ளதாக தகவல்.

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் காயம் காரணமாக தான் ரவீந்திர ஜடேஜா களமிறங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது தொடரிலிருந்தே விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

நடப்பு சீசனில் சென்னை அணிக்கு புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ஜடேஜாவின் ஆட்டமும் சரி, அணி வெற்றியும் சரி சிறப்பாக அமையவில்லை. அப்போதும் பீல்டிங், பவுலிங் மற்றும் பேட்டிங் என மும்முனையில் கலக்கும் ஜடேஜாவுக்கு இந்தாண்டு சற்று சரிவை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் கேப்டன் பொறுப்பும் கூடியது. இதனால், தனது ஆட்டத்தை சரியாக வெளிப்படுத்த முடியாமல் அதிக ப்ரஸரில் இருப்பதாக தெரியவந்தது.

இதன் காரணமாக மீண்டும் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருக்க வேண்டும் என்று ஜடேஜா வலியுறுத்த, தோனியும் அதனை ஏற்றுக்கொண்டார். இதன்பின் ஜடேஜாவின் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போதும் முறையாக அமையவில்லை. ஜடேஜா மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்தன. இந்த நிலையில், பீல்டிங்கின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், சற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் மற்ற அணிகளின் வெற்றி மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இருக்கும். குறிப்பாக சென்னை வரும் 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஒரு சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என்பதாகும். இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

2 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

3 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago