அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!

Published by
அகில் R

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்.

ஐபிஎல்லை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அடுத்து ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றும் வருகிறது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் இந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதற்கு பலவித சர்ச்சைகளும், பல கேள்விகளும் தற்போது வரை எழுந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு புறம் இருக்கையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியை பற்றி கூறியதுடன் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் கூறி இருந்தார்.

அவர் பேசுகையில், “இந்த உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் காலை 10 மணி அளவில் நடைபெறும் அதனால் மைதானத்தில் பிட்சுகள் சற்று சரிந்தே காணப்படும். அதனால் நம் வீரர்கள் விரைவில் அந்த விக்கெட்டுக்கு பழகி சூழ்நிலைக்கு ஏற்றவாறு திரும்ப வேண்டும். மேலும், ரோஹித் சர்மா ஒரு நல்ல கேப்டனாக நல்ல பார்மில் இருக்கிறார் அதே போல விராட் கோலியும் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்த பார்மில் இருக்கிறார்.

அவருடன் அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவிர்க்கும் பந்து நன்றாகவே அவரது பேட்டில் பந்து படுகிறது. மேலும், பவ்ரபிளேவில் பந்து வீச இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அக்சர் படேலும், ரவீந்திர ஜடேஜாவும் ஸ்பின்னராக செல்கிறார்கள் இதனால் இந்திய அணி ஒரு சமநிலையில் உள்ளது.

அவர் (ஹர்திக் பாண்டியா) உண்மையிலேயே இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். தற்காலிகமாக இருக்கும் அவரது மோசமான பார்ம்  அவரை தனிப்பட்ட முறையிலும், இந்திய அணியையும் அது பாதிக்காது. அவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் போது ​​அனைவரும் அவரைப் பாராட்டுவார்கள்” என்று சுரேஷ் ரெய்னா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

10 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

12 hours ago