33 ரன்கள் முன்னிலையுடன் 145 ரன்களில் சுருண்டது இந்தியா அணி.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளும் ,அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.இதன் பின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள் .இதற்கிடையில் சுப்மான் கில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்பு களமிறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .பின் விராட் கோலி 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 33 ஓவர்களில் 99 ரன்களை எடுத்தது.தற்பொழுது களத்தில் ரோகித் ஷர்மா 57(82) மற்றும் ரகானே 1(3) களத்தில் இருந்தனர்.இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது.இந்திய அணி இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 33 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரகானே 7 ரன்கள், ரோகித் 66 ரன்கள், பண்ட் 1 ரன், சுந்தர் மற்றும் அக்சர் டக் அவுட், அஸ்வின் 17 ரன்கள்,பும்ரா 1 ரன் என எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கேப்டன் ரூட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்மேலும் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் பின் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…