ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து வீடுதிரும்பிய ரஹானே, கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். அவரின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்து வருகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த சுற்றுப்பயணத்தை முடித்து இந்திய வீரர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ரஹானே தங்கியிருந்த அபார்ட்மெண்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். ஆஸ்திரேலியா மண்ணில் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, கங்காரு வடிவிலான கேக்கை தயார் செய்து, அதனை வெட்டுவதற்காக அவர்முன் வைத்தனர்.
அந்த கேக்கை ரஹானேவிடம் வெட்டுமாறு கூறினார்கள். ஆனால் ரஹானே, அதனை வெட்ட மறுத்துவிட்டார். கங்காரு, ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய மிருகம் என்பதால், ரஹானே இந்த கேக்கை வெட்ட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ரஹானேவின் இந்த செயல், அவரின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…