ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து வீடுதிரும்பிய ரஹானே, கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். அவரின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்து வருகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த சுற்றுப்பயணத்தை முடித்து இந்திய வீரர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ரஹானே தங்கியிருந்த அபார்ட்மெண்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். ஆஸ்திரேலியா மண்ணில் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, கங்காரு வடிவிலான கேக்கை தயார் செய்து, அதனை வெட்டுவதற்காக அவர்முன் வைத்தனர்.
அந்த கேக்கை ரஹானேவிடம் வெட்டுமாறு கூறினார்கள். ஆனால் ரஹானே, அதனை வெட்ட மறுத்துவிட்டார். கங்காரு, ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய மிருகம் என்பதால், ரஹானே இந்த கேக்கை வெட்ட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ரஹானேவின் இந்த செயல், அவரின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…