இந்த முறை விடுங்க..அடுத்த வாட்டி பாருங்க..இஷான் கிஷனுக்கு ஆதரவாக இறங்கிய பொல்லார்ட்!

Published by
பால முருகன்

Kieron Pollard : இந்த முறை இஷான் கிஷன் சரியாக விளையாடவில்லை அடுத்த முறை பயங்கரமாக விளையாடுவார் என கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியதில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் டக் அவுட் ஆகி இருந்தார்.

இந்த நிலையில், இந்த ஒரு போட்டியை வைத்து அவரை விமர்சனம் செய்யாவேண்டாம் என்றும் அடுத்தடுத்த போட்டிகளில் அவருடைய சிறப்பான ஆட்டத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான கீரன் பொல்லார்ட் போட்டி முடிந்த பிறகு பேசினார்.

இது குறித்து பேசிய கீரன் பொல்லார்ட்  ” இஷான் கிஷன் இந்த போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று அவரை விமர்சிக்காதீங்க. மக்கள் நினைப்பது போல் இது மிகவும் எளிதான விஷயம் இல்லை. எடுத்த உடனே விருப்ப படி விளையாட முடியாது. என்னை பொறுத்தவரை அவர் டி20 வடிவங்களில் அனுபவம் வாய்ந்த வீரர். இதுவரை எங்களுடைய மும்பை அணிக்காக அதிகமாக விளையாடி இருக்கிறார்.

இஷானிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறோம்.நான் அவர் பயிற்சிகள் எடுக்கும்போது பார்த்து வருகிறேன். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். எனவே அடுத்த இரண்டு ஆட்டங்களில் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை நீங்கள் கண்டிப்பாகவே எதிர்பார்க்கலாம். அவர் அப்படிய விளையாடிய பிறகு கண்டிப்பாக நீங்கள் அவரை பாராட்டுவீர்கள்” எனவும்  கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.  மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி வரும் மார்ச் 27-ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

1 hour ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago