நடப்பு உலகக்கோப்பையில் 9 லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் 591 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் இந்தியா -நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் கிங் கோலி அரைசதம் விளாசி 51 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய போட்டியில் 51 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு தொடரில் 594 ரன்கள் குவித்துள்ளார்.
சதம் விளாசிய ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் .. நெதர்லாந்திற்கு 411 ரன்கள் இலக்கு..!
இதனால், நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் 591 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த குயின்டன் டி காக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். கோலி ஐந்து அரைசதங்கள் மற்றும் இரு சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், இன்னும் 9 ரன்கள் இன்று எடுத்து இருந்தால் உலகக் கோப்பையில் 600 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை கோலி பெற்று இருப்பார். ஆனால் அதை கோலி இன்று தவற விட்டார்.
இருப்பினும் வரும் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் இந்த சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பையில் 2019-ல் ரோஹித் சர்மாவும், 2003-ல் சச்சின் டெண்டுல்கரும் 600 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…