KKR vs GT: குர்பாஸ் அதிரடி பேட்டிங்; குஜராத் அணிக்கு வெற்றி பெற இதுதான் இலக்கு.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரில் இன்றைய KKR vs GT போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 179/7 ரன்கள் குவிப்பு.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து, வெளியேற அதன்பின் களமிறங்கிய ஷர்துல் தாக்குர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவரையடுத்து வெங்கடேஷ்(11) மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா(4) ரன்கள் எடுத்து வெளியேறினர்.

மறுபுறம் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசிய குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்கள்(7 சிக்ஸர், 5 போர்கள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிங்கு சிங்(19) மற்றும் ரசல்(34) ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்களும், ஜோசுவா லிட்டில் மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்களையம் வீழ்த்தினர்.

Published by
Muthu Kumar

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

42 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago