அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்திய கொல்கத்தா! என்னென்ன தெரியுமா?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : இந்த முறை ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதுடன் இந்த தொடரிலும் புதிய புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளது அதனை பற்றி இதில் பார்க்கலாம்.

இந்த ஆண்டில் நடைபெற்று தற்போது முடிந்திருக்கும் இந்த ஐபிஎல் 2024-ம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. மேலும், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் 4 முறை இறுதி போட்டிக்கு வந்து அதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்த படியாக ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளனர்.

இந்த கோப்பையை வென்றதன் மூலம் நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி புதிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. அதில் முதலாவதாக, இந்த 2024-ல் சீசனில் கொல்கத்தா அணி 14 லீக் போட்டி, 2 பிளே ஆஃப் போட்டி என மொத்தம் 16 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 16 போட்டிகளில், வெறும் 3 தோல்விகளை மட்டுமே பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

இதனால் 2008-ம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற அணியான ராஜஸ்தான் அணியும் அந்த தொடரில் 3 தோல்விகளை மட்டுமே பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர். இதனால் ஒரு தொடரில் குறைந்த போட்டிகளில் தோற்று கோப்பையை வென்ற அணியாக கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணிக்கு அடுத்த படியாக மாறியுள்ளது.

2-வதாக, ஐபிஎல் வரலாற்றில் பிளே-ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளில் அதிக பந்துகள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாக கொல்கத்தா அணி உள்ளது. 3-வதாக இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் கொல்கத்தா அணி, எதிர்த்து விளையாடிய எதிரணிகளை 6 முறை ஆல்-அவுட் செய்துள்ளது. ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு அணி அதிக முறை ஆல்-அவுட் செய்திருப்பது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன் இந்த சாதனையை மும்பை அணி (4 முறை -2008, 2010) கைவசப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

4-வது சாதனையாக, கொல்கத்தா அணி இந்தியாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் அனைத்திலும் வெற்றி பெற்று, அதாவது 100% சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி மொத்தம் 4 முறை இறுதி போட்டிக்கு சென்றுருக்கிறது அதில் 1 முறை சென்னை அணியிடம் தோல்வியடைந்துள்ளது. ஆனால் தோல்வியடைந்த அந்த 1 இறுதி போட்டியும் துபாயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5-வது சாதனையாக, ஐபிஎல் தொடரில் ஒரு இறுதி போட்டியில் அதிக டாட் பந்துகள் வீசிய அணியாக முதலிடத்தில் உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் மட்டும் 56 டாட் பந்துகளை வீசியுள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இறுதி போட்டியில் அதிக டாட் பந்துகள் வீசிய புதிய சாதனையை படைத்துள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

24 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

1 hour ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

2 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

3 hours ago