KKR , IPL2024 Champions [file image]
ஐபிஎல் 2024 : இந்த முறை ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதுடன் இந்த தொடரிலும் புதிய புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளது அதனை பற்றி இதில் பார்க்கலாம்.
இந்த ஆண்டில் நடைபெற்று தற்போது முடிந்திருக்கும் இந்த ஐபிஎல் 2024-ம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. மேலும், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் 4 முறை இறுதி போட்டிக்கு வந்து அதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்த படியாக ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளனர்.
இந்த கோப்பையை வென்றதன் மூலம் நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி புதிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. அதில் முதலாவதாக, இந்த 2024-ல் சீசனில் கொல்கத்தா அணி 14 லீக் போட்டி, 2 பிளே ஆஃப் போட்டி என மொத்தம் 16 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 16 போட்டிகளில், வெறும் 3 தோல்விகளை மட்டுமே பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
இதனால் 2008-ம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற அணியான ராஜஸ்தான் அணியும் அந்த தொடரில் 3 தோல்விகளை மட்டுமே பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர். இதனால் ஒரு தொடரில் குறைந்த போட்டிகளில் தோற்று கோப்பையை வென்ற அணியாக கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணிக்கு அடுத்த படியாக மாறியுள்ளது.
2-வதாக, ஐபிஎல் வரலாற்றில் பிளே-ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளில் அதிக பந்துகள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாக கொல்கத்தா அணி உள்ளது. 3-வதாக இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் கொல்கத்தா அணி, எதிர்த்து விளையாடிய எதிரணிகளை 6 முறை ஆல்-அவுட் செய்துள்ளது. ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு அணி அதிக முறை ஆல்-அவுட் செய்திருப்பது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன் இந்த சாதனையை மும்பை அணி (4 முறை -2008, 2010) கைவசப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
4-வது சாதனையாக, கொல்கத்தா அணி இந்தியாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் அனைத்திலும் வெற்றி பெற்று, அதாவது 100% சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி மொத்தம் 4 முறை இறுதி போட்டிக்கு சென்றுருக்கிறது அதில் 1 முறை சென்னை அணியிடம் தோல்வியடைந்துள்ளது. ஆனால் தோல்வியடைந்த அந்த 1 இறுதி போட்டியும் துபாயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
5-வது சாதனையாக, ஐபிஎல் தொடரில் ஒரு இறுதி போட்டியில் அதிக டாட் பந்துகள் வீசிய அணியாக முதலிடத்தில் உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் மட்டும் 56 டாட் பந்துகளை வீசியுள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இறுதி போட்டியில் அதிக டாட் பந்துகள் வீசிய புதிய சாதனையை படைத்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…