#ENGvIND: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 276 ரன்.., கே.எல்.ராகுல் சதம் விளாசல்..!

Published by
murugan

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். 3 மணி அளவில் மழை பெய்ததால் டாஸ் தாமதம் ஆனது.

இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இந்திய அணி பேட்டிங் செய்து வந்த நிலையில், 18.4 ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், போட்டி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினார். ஒருகட்டத்தில் ரோகித் சர்மா ஒருபுறம் அதிரடி காட்ட மறுபுறம் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 145 பந்தில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.

இதைத் தொடர்ந்து களம் கண்ட புஜாரா வந்த வேகத்திலேயே 9 ரன்களுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,  கே.எல்.ராகுலுடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த ஆரம்பித்தார். ஒருபுறம் கோலி விளையாடி கொடுக்க மறுபுறம் கே.எல்.ராகுல் நிதானமாக ரன்களை குவித்து வந்தார். சிறப்பாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 212 பந்தில் சதம் விளாசினார்.

நிதானமாக விளையாடிய கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்க்கப்பட்ட நிலையில், 42 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வீரராக ரஹானே களமிறங்கினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்தனர். களத்தில் கே.எல் ராகுல் 127*,  ரஹானே 1* ரன்களுடன் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் தொடக்க வீரராக களம் இறங்கி சதமடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

13 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

13 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

14 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

16 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

16 hours ago