டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் 5-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இன்று ஐசிசி சமீபத்திய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்ஹாம்மில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் பந்தில் ஆட்டமிழந்த இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே வெளியேற்றப்பட்ட விராட், தரவரிசை பட்டியலில் மேலும் ஒரு இடம் கீழே இறங்கியுள்ளார்.
இப்போது விராட் கோலியின் டெஸ்ட் தரவரிசை 5 வது இடத்தில் உள்ளது. ஆனால் மறுபுறம், நாட்டிங்ஹாமில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9 வது இடத்திற்கு முன்னேறினார்.
முன்னதாக செப்டம்பர் 2019 இல், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். அப்போது பும்ரா 110 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விளையாட முடிந்தது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடவதற்குள் மழையால் போட்டி டிராவில் முடிந்தது.
மறுபுறம், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 64 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார். அவர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால், டெஸ்ட் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு ஜோ ரூட் வந்துள்ளார்.
இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முறையே ஆறாவது மற்றும் 7 வது இடத்தில் தொடர்ந்து உள்ளனர். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி 36 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் கே.எல் ராகுல் முதல் இன்னிங்சில் 84, இரண்டாவது இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்ததால் 56 வது இடத்திற்கு சென்றார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…