நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில்143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதற்கு முன் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து 1987 , சச்சின் 1996, 2003 ஆகிய உலகக்கோப்பையில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் அடித்து இருந்தனர்.அதன் பிறகு தற்போது கோலி தொடர்ந்து நான்கு போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.
மேலும் உலககோப்பையில் தொடர்ந்து நான்கு போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்த கேப்டன்களில் 3-வது கேப்டன் என்ற பெருமையை படைத்தார்.இதற்கு முன் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கிரேமி சுமித் 2007 உலககோப்பையிலும் , ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் நடப்பு உலககோப்பையில் தொடர்ந்து நான்கு போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்தனர்.
தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்றாவதாக இடம் பிடித்து உள்ளார்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…