விராட் கோலியிடம் பல திட்டங்கள் உள்ளது என்று பெங்களூர் அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன் எடுத்தார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் சற்று தடுமாறிய ஹைதராபாத் அணி, இறுதியாக டேவிட் வார்னரின் நிதானமான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
வெற்றியடைந்த பிறகு பேசிய பெங்களூர் அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறியது ” இந்த மைதானம் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. அதனால் சரியாக விராட் கோலி ஷாபாஸ் அகமதுவுக்கு வாய்ப்பளித்தார். இதற்கு முக்கிய காரணமே மனீஷ் பாண்டே பேர்ஸ்டோ ஆகிய இருவரையும் வீழ்த்துவதற்கு சுழற் பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமதுவை பயன்படுத்தினர். அவர் நினைத்தது போல் நடந்து விட்டது. இதைபோல் விராட்கோலியிடம் பல திட்டங்கள் உள்ளது என்றும் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…