37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் டி20 தொடரின் 12-வது போட்டியில் கொல்கத்தா அணியும் மற்றும் ராஜஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில் , சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சுனில் நரைன் 15 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய நிதிஷ் ராணா 22 , ரஸ்ஸல் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மத்தியில் களம் கண்ட மோர்கன் 34 ரன்கள் விளாசினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் கொல்கத்தா அணி எடுத்தனர். 175 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக  பட்லர்,  ஸ்மித் இருவரும் இறங்கினர்.

வந்த வேகத்தில் ஸ்மித் 3 ரன்னில் விக்கெட் இழந்தார்.பிறகு இறங்கிய சஞ்சு சாம்சன் 8 ரன் எடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த  பட்லர் 21 ரன்னில் வெளியேற பிறகு இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்தியில் இறங்கிய டாம் கரண் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Published by
murugan
Tags: IPL2020

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago