Kusal Mendis
தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இன்று ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இப்போட்டியில் குசல் மெண்டிஸ் அபாரமாக பேட்டிங் செய்த அதே வேளையில் அவர் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார்.
இலங்கையின்தொடக்க வீரர் குசல் பெரேரா ஹசன் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்ப பின்னர் பாத்தும் நிஷங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் கை கோர்த்து சிறப்பாக விளையாடினார். நிஷாங்கா அரைசதம் எடுத்தார். மெண்டிஸ் சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் சதம் அடித்தார். மெண்டிஸ் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கால் விளாசி மொத்தம் 122 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை மெண்டிஸ் பெற்றுள்ளார்.
இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
49 பந்துகள் – ஐடன் மார்க்ரம்
50 பந்துகள் – கெவின் ஓ பிரையன்
51 பந்து – கிளென் மேக்ஸ்வெல்
52 பந்துகள் – ஏபி டி வில்லியர்ஸ்
57 பந்துகள் – இயான் மோர்கன்
65 பந்துகள் – குசல் மெண்டிஸ்
இந்நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மெண்டிஸிக்கு பதிலாக அணியில் துஷான் ஹேமந்த களத்தில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…