‘அவருக்கு பதிலா சஞ்சுவை விளையாடவைக்கலாம் ..’ ! சுட்டிக்காட்டிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Published by
அகில் R

சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அந்த வீரருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என அவரது கருத்தை கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறாமல் இருந்தார், அவருக்கு பதிலாக சிவம் துபே களம் கண்டிருந்தார்.

ஒரு நல்ல ஆல்ரவுண்டர் வீரர் அணியில் இருக்க வேண்டுமென சிவம் துபேவை எடுத்துள்ளார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அன்றைய போட்டியில் அவர் பந்தும் வீசவும் இல்லை பேட்டிங் போதிலும் போதும் கடைசியாகவே வந்தார். மேலும், 2 பந்துகளை சந்தித்து அதில் ரன்கள் எதுவும் எடுக்கவும் இல்லை.

தற்போது, இதனை சுட்டி காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஈஎஸ்பிஎன் இன்ஃபோ (ESPN CricketInfo) பத்திரிக்கைக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் பேசி இருப்பார். அவர் கூறுகையில், “ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக சிவம் துபேவை அணியில் எடுத்திருக்கிறீர்கள் ஆனால் அவர் அயர்லாந்து அணியுடனான போட்டியில் பந்து வீசவில்லை. அவர் பந்து வீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கலாமே.

சஞ்சு சாம்சன் அவரைவிட சிறப்பான பேட்ஸ்மேனாக விளையாடுவார். அவரை களம் இருக்கலாம், சஞ்சு சாம்சன் மிகவும் பக்குவத்துடனும் இருக்கிறார் என நான் நம்புகிறேன். மேலும், சஞ்சு சாம்சன் தற்போது சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார். எனவே, இப்போதே அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Published by
அகில் R

Recent Posts

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

21 minutes ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

49 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

2 hours ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

12 hours ago