இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் நேற்று போட்டி முடிந்தவுடன் கூறியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறியது ” நாங்கள் வருகின்ற போட்டியில் சிறப்பாக விளையாடுவோம். இந்த போட்டியில் தோல்வியடைந்த முழு காரணத்தை நானே ஏற்றுக்கொள்கிறேன். மனிஷ் பாண்டே மிகவும் சிறப்பாக விளையாடினர். அதைபோல் கடைசி நேரத்தில் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 170 ரன்கள் என்பது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர்தான். பவர் பிளேவில் நாங்கள் விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால், பேட்ஸ்மேன்கள் அழுத்தங்கள் இல்லாமல் விளையாடினர். வரும் போட்டிகளில் எங்கள் தவறுகளை திருத்திவிட்டு சிறப்பாக விளையாடுவோம்” என்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…