IPL2022Auction: வெளியானது 590 வீரர்களின் பட்டியல்: எந்த அணிக்கு எவ்வளவு பட்ஜெட் தெரியுமா..?

Published by
Castro Murugan

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2022) மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்த முறை ஏலம் எடுக்கப்படும் அனைத்து வீரர்களின் பட்டியலை BCCI வெளியிடப்பட்டுள்ளது.  

பெங்களூருவில் ஐபிஎல் 2022 ஏலம் வரும் 12 மற்றும் 13 -ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தமாக ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதில்,  370 இந்திய வீரர்களும்,  220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். இம்முறை ஏலத்தில் எடுக்கப்படும் 590 கிரிக்கெட் வீரர்களில் 228 பேர் கேப்டு வீரர்கள், 355 பேர் கேப் செய்யப்படாத வீரர்கள் இவர்களைத் தவிர அசோசியேட் நாடுகளில் நமீபியாவைச் சேர்ந்த மூன்று வீரர்களும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இருவரும், ஜிம்பாப்வே மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் ஆவார்.

ஒரு அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்கலாம். இந்த ஐபிஎல் தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, இஷான் கிஷன், அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சாஹல் போன்ற நாட்டு வீரர்களின் பெயர்களும் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இருப்பினும், ஐபிஎல்-ன் பெருமைக்குரிய ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்ற பெரிய பெயர்கள் இந்த முறை பட்டியலில் இடம்பெறவில்லை.

வெளிநாட்டு வீரர்ளில்  இந்த முறை டு பிளெசிஸ், டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ரபாடா, டிரென்ட் போல்ட், குயின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ, ஷகிப் அல் ஹசன், வனிந்து ஹசரங்க உள்ளிட்ட மற்ற வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படை விலை ரூ.2 கோடி மற்றும் ரூ.1.5 கோடி மதிப்பில் 20 வீரர்கள் உள்ளனர். மேலும், 34 வீரர்களின் பெயர்கள் அடிப்படை விலையான ரூ.1 கோடியில் உள்ளது. ஆஸ்திரேலியா (47), வெஸ்ட் இண்டீஸ் (34), தென் ஆப்ரிக்கா (33) ஆகிய நாடுகளில் அதிக வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

எந்த அணியில் எவ்வளவு பணம்:

பஞ்சாப் – 72 கோடி
ஹைதராபாத் – 68 கோடி
ராஜஸ்தான் – 62 கோடி
பெங்களூர்  – 57 கோடி
மும்பை – 48 கோடி
சென்னை  – 48 கோடி
கொல்கத்தா – 48 கோடி
டெல்லி  – 47.5 கோடி
லக்னோ – 60 கோடி
அகமதாபாத் – 53 கோடி

பஞ்சாப் கிங்ஸ்அணியிடம்  அதிகபட்சமாக 72 கோடியும் மற்றும் டெல்லியில் குறைந்த தொகையான ரூ.47.5 கோடி உள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு…

5 hours ago

பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!

பெங்களூர் :  பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின்…

5 hours ago

”பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது” – பிரதமர் மோடி இரங்கல்.!

பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.…

6 hours ago

”பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல்…

6 hours ago

ஆர்சிபி வெற்றி விழாவில் சோகம்.., மெட்ரோ நிலையங்கள் மூடல்.!

பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால்,…

6 hours ago

ஆர்சிபி கொண்டாட்டத்தில் சோகம்.., பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…

8 hours ago