CSK bowl lsg bat [ImageSource-Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 125/7 ரன்கள் குவித்திருந்த போது ஆட்டம் மழையால் நிறுத்தம்.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா ஸ்டேடியத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணியில், தொடக்க வீரர்கள் மனன் வோஹ்ரா(10) மற்றும் கைல் மயர்ஸ்(14) ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாற, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன்கள் குவிக்க தவறினர். ஆயுஷ் படோனி மட்டும் நிதானமாக நின்று விளையாடி, தேவையான பந்துகளில் ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார்.
இதனால் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக லக்னோ அணியில், ஆயுஷ் படோனி 59* ரன்களும், பூரன் 20 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பில் மொயின் அலி, பதிரனா மற்றும் தீக்ஷனா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…