ஐபிஎல் 2024: பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024:  இன்றைய போட்டியில் 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர்.

இந்த போட்டியில் தொடக்க வீரரான குயின்டன் டி காக் அதிகபட்சமாக 56 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட மொத்தம் 81 ரன்கள் குவித்தார். மத்தியில் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 21 பந்தில் 5 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி உட்பட  40* ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் கடைசிவரை இருந்தார். 19-வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார்.

அதேநேரத்தில் கே.எல் ராகுல் 20,  மார்கஸ் ஸ்டோனிஸ்  24 ரன் எடுத்தனர். பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டையும்,  சிராஜ், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள் தலா 1 விக்கெட்டை பறித்தனர். பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் சற்று சிறப்பாக அமைந்தாலும் அது நிலைத்து நிற்கவில்லை 5 ஓவரில் விராட்கோலி 22 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

மறுமுனையில் இருந்த பிளெசிஸ் அடுத்த ஓவரில் 19  ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.  அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 9 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல்  டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் 58 ரன்களுக்கு  பெங்களூரு அணி  4 விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வெறும் 4 ரன் மட்டுமே எடுத்தார்.

இருப்பினும் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். இறுதியாக 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டையும், மார்கஸ் ஸ்டோனிஸ் , மணிமாறன் சித்தார்த், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

 

 

Published by
murugan

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

6 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

7 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

7 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

8 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

8 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

9 hours ago